செய்திகள்
திருப்பூர் கோர்ட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆஜராக வந்த போது எடுத்தப்படம்.

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு - திருப்பூர் கோர்ட்டில் ஈ.வி.கே.எஸ்.,இளங்கோவன் ஆஜர்

Published On 2021-09-22 10:20 GMT   |   Update On 2021-09-22 10:20 GMT
இந்த வழக்கில் இன்று ஆஜராக வேண்டுமென ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 10-2-2016 அன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியதாக அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்  உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திருப்பூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று ஆஜராக வேண்டுமென ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது.அதன்படி இன்று காலை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திருப்பூர் மகிளா கோர்ட்டில் ஆஜ ரானார். இந்தநிலையில் வழக்கு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 
Tags:    

Similar News