செய்திகள்
தற்கொலை

குளித்தலை அருகே தூக்குப்போட்டு பேக்கரி உரிமையாளர் தற்கொலை

Published On 2021-09-19 08:01 GMT   |   Update On 2021-09-19 08:01 GMT
குளித்தலை அருகே தூக்குப்போட்டு பேக்கரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:

குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 57). இவர் அப்பகுதியில் பேக்கரி வைத்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சர்க்கரை நோயின் பாதிப்பு காரணமாக இவரது இடது முழங்காலுக்கு கீழே உள்ள பகுதி அறுவை சிகிச்சையால் அகற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது அவரது வலது காலிலும் புண் ஏற்பட்டு உள்ளது. இதனால் மனவேதனையில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூங்க சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் அவரது குடும்பத்தார் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் அந்த அறையில் உள்ள இரும்பு கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பெருமாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News