செய்திகள்
களியக்காவிளை அருகே விபத்து- லாரி மோதி மீன் வியாபாரி பலி
களியக்காவிளை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
களியக்காவிளை:
தக்கலை அருகே உள்ள முளகுமூடு ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் சுஜின் (வயது41). இவர் களியக்காவிளை மீன் சந்தையில் மீன் வியாபாரியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை சுஜின் மீன் வியாபாரம் செய்வதற்கு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து களியக்காவிளைக்கு புறப்பட்டு சென்றார். களியக்காவிளை அருகே ஒற்றா மரம் பகுதியில் டீ குடிப்பதற்கு தனது இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தியுள்ளார்.
அப்போது தோவாளையில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு களியக்காவிளையை நோக்கி சென்ற லாரி சுஜின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சுஜின் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து லாரியை அதன் டிரைவர் விபத்து நடந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்து குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஜினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குழித்துறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற லாரி டிரைவர் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தக்கலை அருகே உள்ள முளகுமூடு ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் சுஜின் (வயது41). இவர் களியக்காவிளை மீன் சந்தையில் மீன் வியாபாரியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை சுஜின் மீன் வியாபாரம் செய்வதற்கு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து களியக்காவிளைக்கு புறப்பட்டு சென்றார். களியக்காவிளை அருகே ஒற்றா மரம் பகுதியில் டீ குடிப்பதற்கு தனது இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தியுள்ளார்.
அப்போது தோவாளையில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு களியக்காவிளையை நோக்கி சென்ற லாரி சுஜின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சுஜின் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து லாரியை அதன் டிரைவர் விபத்து நடந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்து குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஜினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குழித்துறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற லாரி டிரைவர் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.