செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா

Published On 2021-09-16 06:33 GMT   |   Update On 2021-09-16 08:05 GMT
சென்னையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்த 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் கடந்த 13ம் தேதி ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியான நிலையில், பிற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 570 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், விடுதியில் தங்கி படித்த 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த மாணவர்கள் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், வேப்பேரி சித்த மருத்துவ வளாகத்தில்  தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags:    

Similar News