செய்திகள்
கைது

மேலூர் அருகே தூய்மைப் பணியாளர் கொலை வழக்கில் ஒருவர் கைது

Published On 2021-09-15 17:20 GMT   |   Update On 2021-09-15 17:20 GMT
மேலூர் அருகே தூய்மைப் பணியாளர் கொலை வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூர்:

மேலூர் அருகே உள்ளது தெற்கு தெரு. இங்கு தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் நொண்டிச்சாமி (வயது52).

இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் இருவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக நேற்று மாலை தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பாண்டியராஜன் மரக்கட்டையால் தாக்கியதில் நொண்டிச்சாமி பலத்த காயத்துடன் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் நேற்றிரவு மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் நடைபெற்றது.

இறுதியில் இரவு 12.30 மணியளவில் சமரசம் ஏற்பட்டு சாலை மறியல் கைவிடப்பட்டது. அதன்பின் வாகன போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்றது

இதற்கிடையில் குற்றவாளியை பிடிப்பதற்காக போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இன்று காலை மேலூர் அருகே தெற்கு தெருவில் மேலூர் போலீசார் பாண்டியராஜனை பிடித்து கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News