செய்திகள்
கொரோனா தடுப்பூசி

திருவையாறு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-09-13 10:07 GMT   |   Update On 2021-09-13 10:07 GMT
திருவையாறு பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமை தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார்.
திருவையாறு:

திருவையாறு பகுதியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமை தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து திருவையாறு, சாத்தனூர் ஆகிய பகுதியில் அமைத்துள்ள தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார். அப்போது அவருடன் திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், திருவையாறு பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா மற்றும் சுகாதாரத்துறையினர் உடனிருந்தனர். முன்னதாக மணக்கரம்பை, அம்மன்பேட்டை, அரசூர், கண்டியூர், ஆவிக்கரை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாமை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் மஞ்சுளா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News