செய்திகள்
திருட்டு

தஞ்சை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Published On 2021-09-06 07:36 GMT   |   Update On 2021-09-06 07:36 GMT
தஞ்சை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள குருவாடிபட்டியலில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இ்தனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News