செய்திகள்
கொலை

அதிராம்பட்டினத்தில் பெயிண்டர் வெட்டிக்கொலை

Published On 2021-08-31 09:46 GMT   |   Update On 2021-08-31 09:46 GMT
அதிராம்பட்டினத்தில் பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிராம்பட்டினம்:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செட்டி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40) பெயிண்டர். சம்பவத்தன்று இவருக்கும் வாழைகொல்லை பகுதியைச் சேர்ந்த தொழிலாளியான சுரேஷ் (37) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருவரும் சண்டையிட்டு கொண்டனர். இந்நிலையில் நேற்று இரவு பெயிண்டர் சுரேஷ் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பேருந்து நிறுத்தம் பகுதிக்கு சென்றுள்ளார். இதனையறிந்து அங்கு வந்த வாழைகொல்லை சுரேஷ் திடீரென பெயிண்டர் சுரேசின் கழுத்தில் அரிவாளால் வெட்டி தப்பி ஓடினார். இதில் சம்பவ இடத்திலேயே பெயிண்டர் சுரேஷ் இறந்தார்.

தகவலறிந்த பட்டுக்கோட்டை உதவி கண்காணிப்பாளர் செங்கமல கண்ணன் மற்றும் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பெயிண்டர் சுரேஷின் உடலை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து தொழிலாளி சுரேசை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News