செய்திகள்
தேனி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா
தேனியை சேர்ந்த மேலும் 2 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 1,154 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் தனியார் பரிசோதனை கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்த தேனியை சேர்ந்த மேலும் 2 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.