செய்திகள்
விபத்து பலி

திருத்துறைப்பூண்டி அருகே தட்டு ரிக்‌ஷா மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2021-08-27 14:35 GMT   |   Update On 2021-08-27 14:35 GMT
திருத்துறைப்பூண்டி அருகே தட்டு ரிக்‌ஷா மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூர் அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் பூபதி(வயது52). தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. இந்தநிலையில் நேற்று மாலை பூபதி திருத்துறைப்பூண்டியில் தச்சு வேலையை முடித்துவிட்டு ராயநல்லூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மடப்புரம் மாதாகோவில் அருகில் வந்த போது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக தட்டு ரிக்‌ஷா மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பூபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News