செய்திகள்
தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலை

Published On 2021-08-27 10:18 GMT   |   Update On 2021-08-27 10:18 GMT
ஒட்டன்சத்திரம் அருகே நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே தும்மச்சிபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 44). இவர் சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், கடந்த 2 ஆண்டுகளாக தனது சொந்த ஊரில் வசித்து வந்தார். அங்கு தனது நிலத்தை விற்க முடியாததால் அவர் மனமுடைந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த அவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News