செய்திகள்
கோப்புபடம்

அவினாசி குடியிருப்பு வீடுகள் விரைவில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு

Published On 2021-08-25 06:36 GMT   |   Update On 2021-08-25 06:36 GMT
பயனாளிகள் தேர்வு விரைவில் இறுதி செய்யப்பட்டு அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் வீடுகள் ஒதுக்கப்படும்.
அவிநாசி:

அவிநாசி சேவூர் ரோடு சூளையில் ரூ.37 கோடி செலவில் 448 வீடுகள் கட்டும் பணி சில மாதங்களுக்கு முன் முடிந்தது. பயனாளிகள் பட்டியலும் இறுதி செய்யப்பட்டு கலெக்டரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் குடியிருப்பு திறக்கப்படாத நிலையில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் மர்ம நபர்கள் வீடுகளுக்கு முன் பொருத்தப்பட்டுள்ள தண்ணீர் குழாய், மின் வினியோகத்துக்கு பயன்படும் உபகரணம், ஜன்னல் கம்பி, சமையல் அறையில் பொருத்தப்பட்டுள்ள ‘சிங்க்‘ உள்ளிட்ட பொருட்களை திருடி செல்கின்றனர். இதனால் மீண்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:

பயனாளிகள் தேர்வு விரைவில் இறுதி செய்யப்பட்டு அதிகபட்சம்  3 மாதங்களுக்குள் வீடுகள் ஒதுக்கப்படும். அதற்குள் ஒவ்வொரு வீடாக கண்காணித்து ஏதேனும் பணி விடுபட்டிருந்தால் அதை செய்து கொடுக்கும் வேலையை துவக்கியுள்ளோம். பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கப்பட்ட பின் மீண்டும் ஒரு முறை வர்ணம் தீட்டி வீடுகள் புதுப்பொலிவுடன் வழங்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News