செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்- எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

Published On 2021-08-23 05:03 GMT   |   Update On 2021-08-23 05:03 GMT
சட்டசபையில் எழுப்ப வேண்டிய தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினர்.
சென்னை:

தமிழக சட்டசபை 3 நாட்கள் விடுமுறைக்குப்பிறகு இன்று கூடியது. துறைரீதியான மானியக் கோரிக்கை இன்று முதல் அடுத்த மாதம் 17ந்தேதி வரை நடைபெறுகிறது. இன்று நீர்வளத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ள நிலையில் சட்டசபை தொடங்குவதற்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.



சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

சட்டசபையில் எழுப்ப வேண்டிய தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.


Tags:    

Similar News