செய்திகள்
கல்லிடைக்குறிச்சி அருகே தவறி விழுந்து வாலிபர் பலி
கல்லிடைக்குறிச்சி அருகே தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சியை அடுத்த தெற்கு பாப்பாங்குளம் வடக்கு புது காலனியை சேர்ந்தவர் பசுங்கிளி. இவரது மகன் பேச்சிபாண்டி (வயது 34). இவருக்கு ஏற்பட்ட விபத்து ஒன்றில் ஏற்கனவே ஒரு காலை இழந்தார். இந்நிலையில் கடந்த 17-ந்தேதி இரவு வெளியே சென்றார். அப்போது பேச்சிபாண்டி எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் பேச்சிபாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.