செய்திகள்
கோப்புபடம்

வடமதுரையில் பெண் தற்கொலை

Published On 2021-08-16 11:34 GMT   |   Update On 2021-08-16 11:34 GMT
வடமதுரையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:

வடமதுரை அகத்தியர் நகரை சேர்ந்தவர் செல்லமணி. இவர் ஆந்திர மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சத்தியபிரியா (வயது 29). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சத்தியபிரியா உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இருந்த போதிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் வெறுப்படைந்த சத்தியபிரியா நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சத்தியபிரியாவின் தந்தை சுப்பிரமணி வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு சென்று சத்தியபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News