செய்திகள்
திருவாரூரில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி
திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 485 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 21 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 37 ஆயிரத்து 626 பேர் குணம் அடைந்து உள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது மூதாட்டி பலியானார். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 382 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 477 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.