செய்திகள்
திருட்டு

திருப்பத்தூரில் குடிசை வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

Published On 2021-08-10 15:52 GMT   |   Update On 2021-08-10 15:52 GMT
திருப்பத்தூரில் குடிசை வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் டவுன் 36-வது வார்டு சாமியார் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 60). தையல் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (50).

இவர்கள் அதே பகுதியில் உள்ள அனிதா என்பவருடைய குடிசை வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இரவு நேரத்தில் வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்க சென்று உள்ளனர். பூட்டிய வீட்டின் முன்பக்க கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து பீரோவைத் திறந்து அதில் இருந்த 2 பவுன் தங்க நகை, ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறிந்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News