செய்திகள்
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம்

ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை: அமைச்சர்கள் ஆய்வு

Published On 2021-08-09 02:11 GMT   |   Update On 2021-08-09 02:11 GMT
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடம் முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதா என்பதை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
சென்னை:

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று அதிகாலை வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனையை மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.

வெளிமாநில பயணிகளுக்கு முறையாக ரெயில் நிலையங்களில் முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறதா என்பது குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது.

அதிகாலையில் நடைபெற்ற இந்த ஆய்வில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, மருத்துவத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News