செய்திகள்
கைது

வளவனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2021-08-08 15:16 GMT   |   Update On 2021-08-08 15:16 GMT
வளவனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வளவனூர்:

வளவனூர் சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது சுந்தரிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரகு(வயது 36), மோகன்(40), ஸ்ரீநாத்(25), கமல்(30) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News