செய்திகள்
தற்கொலை

ரிஷிவந்தியம் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-07-28 13:59 GMT   |   Update On 2021-07-28 13:59 GMT
ரிஷிவந்தியம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிஷிவந்தியம்:

ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகன் ஏழுமலை(வயது 26). தொழிலாளியான இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக செல்வி கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஏழுமலை வேலை தேடி சென்னைக்கு சென்றார்.

பின்னர் கடந்த 5-ந் தேதி ஊருக்கு திரும்பி வந்த ஏழுமலை செல்வியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்ததால் மனமுடைந்த ஏழுமலை விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அக்கம்அக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி ஏழுலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News