செய்திகள்
தற்கொலை

தரகம்பட்டி அருகே லாரி டிரைவர் தற்கொலை

Published On 2021-07-24 10:33 GMT   |   Update On 2021-07-24 10:33 GMT
தரகம்பட்டி அருகே லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரகம்பட்டி:

தரகம்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 38). லாரி டிரைவர். இவருக்கும், தனலட்சுமி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். தனலட்சுமி தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். குணசேகரன், தரகம்பட்டி அருகே வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இந்தநிலையில் அவர், தரகம்பட்டி வையாளிமடை அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில், சிந்தாமணிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு சென்று குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அவரது சட்டைப்பையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News