செய்திகள்
தற்கொலை

மதுகுடிப்பதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-07-23 14:33 GMT   |   Update On 2021-07-23 14:33 GMT
மதுகுடிப்பதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் ரஜினி. இவரது மகன் அஜய் குமார் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. நேற்று வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் உள்ள அறைக்குள் சென்ற அஜய்குமார் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை.

இதனால் பெற்றோர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது அஜய்குமார் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்ய முற்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News