செய்திகள்
கைது

லாரி டிரைவர் தற்கொலை வழக்கில் 3 பேர் கைது

Published On 2021-07-23 12:08 GMT   |   Update On 2021-07-23 12:08 GMT
லாரி டிரைவர் தற்கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:

மோகனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). பள்ளிபாளையம் அருகே வெப்படையில் உள்ள ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்த செந்தில்குமாரிடம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தினர் வாடகை தொகை வசூலித்தது தொடர்பாக வெப்படைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அங்குள்ள குடோன் ஒன்றில் செந்தில்குமார் தனது உடலில் டீசல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சம்பந்தமாக லாரி அதிபர் மாணிக்கம், அவருடைய மகன் தரணி மற்றும் உறவினர் ஒருவர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News