செய்திகள்
பாளையில் சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை வி.எம்.சத்திரம் அருகே சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெருமாள்புரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரமநாயகம் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது பக்கபட்டியை சேர்ந்த முருகன், வி.எம். சத்திரத்தை சேர்ந்த இசக்கிமுத்து, பேச்சிமுத்து ஆகிய 3 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.31,860 பறிமுதல் செய்யப்பட்டது.