செய்திகள்
தர்மபுரி மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று 56 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினார்கள். மருத்துவமனைகளில் தற்போது 548 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 230 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை மொத்தம் 25 ஆயிரத்து 681 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.