செய்திகள்
காமராஜரின் நற்பணியை எந்நாளும் போற்றிடுவோம்- டி.டி.வி.தினகரன்
தமிழகம் தாண்டி தேசிய அரசியலிலும் முத்திரை பதித்த காமராஜரின் நற்பணிகளை எந்நாளும் போற்றிடுவோம் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
காமராஜர் பிறந்தநாளையொட்டி டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் எத்தனையோ ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்விக்கண் தந்து அவர்களது தலைமுறைகளை மாற்றிய பெருந்தலைவர் காமராஜரை அவர்களது பிறந்தநாளில் வணங்குகிறேன். தமிழகம் தாண்டி தேசிய அரசியலிலும் முத்திரை பதித்த அன்னாரது நற்பணிகளை எந்நாளும் போற்றிடுவோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.