செய்திகள்
கொரோனா தடுப்பூசி

பூதலூர் வட்டாரத்தில் இதுவரை 16 ஆயிரத்து 559 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

Published On 2021-07-14 17:02 GMT   |   Update On 2021-07-14 17:02 GMT
பூதலூர் வட்டத்துக்கு உட்பட்ட ஏதாவது ஒரு கிராமத்திலும் தினமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- பூதலூர் வட்டாரத்தில் பாலையப்பட்டி, கோவிலடி, மாரனேரி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பூதலூர் வட்டத்துக்கு உட்பட்ட ஏதாவது ஒரு கிராமத்திலும் தினமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பூதலூர் வட்டாரத்தில் இதுவரை 15 ஆயிரத்து 321 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 1,238 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது. பூதலூர் வட்டாரத்தில் நேற்று வரை 16 ஆயிரத்து 559 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. பூதலூர் வட்டாரத்தில் 1,307 கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 29 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News