செய்திகள்
தர்மபுரியில் பிஸ்கட் நிறுவனத்தில் ரூ.1.40 லட்சம் திருட்டு
தர்மபுரியில் பிஸ்கட் நிறுவனத்தில் ரூ.1.40 லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி எஸ்.வி. ரோட்டில் பிஸ்கட் விற்பனை செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த நிறுவனத்தின் பின்புறத்தில் உள்ள ஜன்னல் கம்பிகளை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.1.40 லட்சத்தை திருடி சென்றனர். இதுதொடர்பாக நிறுவன உரிமையாளர் சந்தோஷ்குமார் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.