செய்திகள்
கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2021-07-11 10:22 GMT   |   Update On 2021-07-11 10:22 GMT
கரூர் மாவட்டம் காளிபாளையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நொய்யல்:

கரூர் மாவட்டம் காளிபாளையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், அய்யம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பவித்ரா தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காய்ச்சல் பரிசோதனை நடந்தது. பின்னர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புஞ்சை புகளூர் கச்சியப்பன் காலனி, புஞ்சை தோட்டக்குறிச்சி ஒரத்தை ஆகிய பகுதியில் ஒலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா பரிசோ தனை முகாம் நடைபெற்றது. இதில் ஆரம்ப சுகாதார மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு சளி மாதிரி எடுத்தனர்.
Tags:    

Similar News