செய்திகள்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்றது தொடர்பாக போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் தடை செய்ய பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள திருமுண்டீச்சரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் வைத்து லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த சந்தானம் (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.