செய்திகள்
நாய்கள் கடித்து குதறியதில் பலியான மான்.

நாய்கள் கடித்து குதறியதில் மான் பலி

Published On 2021-07-07 08:19 GMT   |   Update On 2021-07-07 08:19 GMT
காட்டுப்பகுதியில் இருந்து 1 வயது பெண் மான் அவினாசி மங்கலம் ரோடு கொல்லங்காட்டுக்கு வந்துள்ளது.
அவினாசி:

அவினாசி ஒன்றியம் புதுப்பாளையம், கோதபாளையம், தெக்கலூர் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. சரிவர பருவமழை இல்லாமல் இங்கு குளம், குட்டைகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதனால் காட்டுப்பகுதியிலிருந்து மான்கள் தண்ணீருக்காக நகர்ப்புறங்களுக்கு வருகிறது. அப்போது தெருநாய்கள் மான்களை துரத்தி கடிக்கிறது.

அவ்வாறு காட்டுப்பகுதியிலிருந்து 1 வயது பெண் மான் அவினாசி மங்கலம் ரோடு கொல்லங்காட்டுக்கு வந்துள்ளது. இதைப்பார்த்த தெருநாய்கள் அந்த மானை துரத்தி சென்று கடித்து குதறியதால் மான்    இறந்தது.

தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து இறந்து கிடந்த மானின் உடலை மீட்டு கருணைபாளையம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டது.
Tags:    

Similar News