செய்திகள்
தச்சநல்லூரில் சலூன் கடைக்காரர் திடீர் மாயம்
தச்சநல்லூரில் சலூன் கடைக்காரர் திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூரில் உள்ள கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசிங் (வயது57), இவர் அங்கு சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி சுமதி. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாலசிங் கடந்த சில வாரங்களாக மனைவி சுமதியிடம் பேசாமல் குடும்பம் நடத்தி வந்தார். கடந்த 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாலசிங் மீண்டும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சுமதி, தச்ச நல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசிங்கை தேடி வருகிறார்கள்.