செய்திகள்
கோப்பு படம்

நாமக்கல் மாவட்டத்தில் 274 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-06-23 11:05 GMT   |   Update On 2021-06-23 11:05 GMT
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 274 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 42 ஆயிரத்து 728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரின் பெயர் அந்தந்த மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 42ஆயிரத்து 721 ஆக குறைந்தது.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 995 ஆக அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 313 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 40 ஆயிரத்து 352 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 2 ஆயிரத்து 254 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 383 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த நாமக்கல், நல்லியாம்பாளையம், நாமகிரிபேட்டை, குமாரமங்கலம், சேந்தமங்கலம், கொசவம்பட்டி பகுதிகளை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.

இதனால் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்து உள்ளது.
Tags:    

Similar News