செய்திகள்
விபத்து பலி

கொட்டாம்பட்டி அருகே லாரி மோதி விவசாயி பலி

Published On 2021-06-22 10:09 GMT   |   Update On 2021-06-22 10:09 GMT
கொட்டாம்பட்டி அருகே லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொட்டாம்பட்டி:

கொட்டாம்பட்டி அருகே உள்ள வலைச்சேரிபட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 58). விவசாயி. இவர் நேற்று முன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கொட்டாம்பட்டி நத்தம் பிரிவு சாலை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் ஆறுமுகத்தை (52) கைது செய்தனர்.
Tags:    

Similar News