செய்திகள்
கொரோனா வைரஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 பேருக்கு கொரோனா- 2 பேர் பலி

Published On 2021-06-19 13:40 GMT   |   Update On 2021-06-19 13:40 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 67 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 பேர் பலியானார்கள்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 67 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 பேர் பலியானார்கள். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 188 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 128 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை 18 ஆயிரத்து 200 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 668 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 320 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தலா ஒரு பெண், ஆண் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News