செய்திகள்
கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் 23 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-06-19 10:26 GMT   |   Update On 2021-06-19 10:26 GMT
நாமக்கல் மாவட்டத்தில் 23 இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முன்னதாக முகாம்கள் நடைபெறும் இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 23 இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முன்னதாக முகாம்கள் நடைபெறும் இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. குறிப்பாக நாமக்கல் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 டோஸ் தடுப்பூசிகளும், முதலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 டோஸ் தடுப்பூசிகளும், எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தந்த சுகாதார நிலையங்களின் முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொண்டதை காணமுடிந்தது. இதனிடையே மாவட்டத்தில் 23 இடங்களில் நடந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் 200 பேர் உள்பட 4,280 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
Tags:    

Similar News