செய்திகள்
கொரோனா வைரஸ்

நன்னிலத்தில் 3 நாளில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-06-19 09:27 GMT   |   Update On 2021-06-19 09:27 GMT
நன்னிலம் பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வரும் அதே சூழ்நிலையில், தொற்று பரவல் அதிகமாக இருப்பது பொதுமக்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியது. ஏற்பட்டுள்ளது.

நன்னிலம்:

நன்னிலம் பகுதியில் கடந்த ஒருவார காலமாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பாக புதிதாக 2 பேருக்கு கொரான தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் புதிதாக 12 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்னிலம் பகுதிகளில், தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வரும் அதே சூழ்நிலையில், தொற்று பரவல் அதிகமாக இருப்பது, பொதுமக்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியது. இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Tags:    

Similar News