செய்திகள்
திண்டுக்கல் அருகே ரூ.50 லஞ்சம் வாங்கி பணியை இழந்த சப்-இன்ஸ்பெக்டர்
திண்டுக்கல் அருகே ரூ.50 லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஜவஹர். இவர் சம்பவத்தன்று நத்தம் - மதுரை ரோட்டில் உள்ள பரளிபுதூர் சோதனைச்சாவடியில் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக காய்கறிகளை ஏற்றி வந்த வேனை மறித்து பணம் கேட்டுள்ளார்.
வாகனத்தை விடுவிக்க ரூ.50 லஞ்சம் கேட்ட வீடியோவை அருகில் இருந்த நபர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. ரவளி பிரியா உத்தரவிட்டார்.
விசாரணையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் ரூ.50 லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. உத்தரவிட்டார்.