செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 226 பேர் பாதிப்பு

Published On 2021-06-18 13:31 GMT   |   Update On 2021-06-18 13:31 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்று 2-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்று 2-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 226 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 794 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

1,428 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,641 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 7 பேர் இறந்துள்ளனர்.
Tags:    

Similar News