செய்திகள்
தற்கொலை

கணவர் இறந்த வேதனையில் பெண் தற்கொலை

Published On 2021-06-17 09:58 GMT   |   Update On 2021-06-17 09:58 GMT
கணவர் இறந்த வேதனையில் இருந்த புவனேஸ்வரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்:

மரக்காணம் தாலுகா கீழ்புத்துப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மனைவி புவனேஸ்வரி (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

ராஜா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அதில் இருந்து புவனேஸ்வரி மிகுந்த மனஉளைச்சலுடன் காணப்பட்டு வந்தார். சம்பவத்தன்று புவனேஸ்வரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News