செய்திகள்
கைது

தியாகதுருகம் அருகே சாராயம் விற்றவர் கைது

Published On 2021-06-15 15:13 GMT   |   Update On 2021-06-15 15:13 GMT
தியாகதுருகம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்:

தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் பல்லகச்சேரி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயத்தை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பழைய பல்லகச்சேரி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை(வயது 50) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 11 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News