சிறுமுகையில் தக்காளி கூடைக்குள் மது பாட்டில் கடத்தி வந்த 2 பேர் கைது
கோவை:
கோவை சிறுமுகை அடுத்த சின்னகள்ளிபட்டி சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து தக்காளி கூடைகளை ஏற்றி மினி வேன் ஒன்று வந்தது. அதனை போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் மினி வேன் சோதனை செய்தனர். அதில் தக்காளி கூடைக்குள் கர்நாடகா மாநில மது பாட்டில்கள் பதிக்கி கடத்தி வந்தது தெரியவந்தது.
பின்னர் தக்காளி கூடைக்குள் இருந்த 164 மது பாட்டில்களை கைப்பற்றி மினி வேனில் வந்த 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜன் (வயது 45) மற்றும் சின்ன மத்தம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (25) என்பது தெரியவந்தது
இதையடுத்து சிறுமுகை போலீசார் வழக்கப்பதிவு 2 பேரையும் கைது செய்து அவர்கள் கடத்தி வந்த மது பாட்டில் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்தனர்.