செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கரூர் மாவட்டத்தில் இதுவரை1 லட்சத்து 17 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா தடுப்பூசி- கலெக்டர் தகவல்

Published On 2021-06-13 11:54 GMT   |   Update On 2021-06-13 11:54 GMT
கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான அளவில் ஆக்சிஜன் இருப்பில் உள்ளது.
கரூர்:

கரூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கரூர் மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 311 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் 17 ஆயிரத்து 727 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் 580 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 337 பேரும், கொரோனா பராமரிப்பு மையத்தில் 99 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,258 பேர் மருத்துவ உதவிகளுடன் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பரிசோதனை கடந்த 1.4.2021-ந்தேதியில் இருந்து இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 049 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான அளவில் ஆக்சிஜன் இருப்பில் உள்ளது.

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கின் போது விதிமீறலில் ஈடுபட்ட வணிகநிறுவனங்கள், பொதுமக்கள் மீது இதுவரை ரூ.80 லட்சத்து 5 ஆயிரத்து 300 அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News