செய்திகள்
மதுக்கரை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
மதுக்கரை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செட்டிப்பாளையம்:
கோவை மதுக்கரை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மதுக்கரை குவாரி அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அகமத் சீனன் (வயது 23), பாலக்காட்டைச் சேர்ந்த சபில் (21) ஆகிய 2 பேரயும் கைது செய்தனர். பின்னர் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கில் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.