செய்திகள்
காவிரியில் தண்ணீர் திறப்பை உறுதி செய்க: மத்திய நீர்வளத்துறை மந்திரிக்கு முதலமைச்சர் கடிதம்
காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங்க ஷெகாவத்திற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:
மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங்க ஷெகாவத்திற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் உரிய அளவில் காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய வேண்டும். மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரை சார்ந்தே காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
காவிரியில் நீர் திறக்கப்படாவிடில் குறுவைப் பயிரும், சம்பா சாகுபடியும் பாதிக்கும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.