செய்திகள்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத்தலி தலைமையிலான போலீசார் தியாகராஜபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த மகேஸ்வரி(வயது 36), மீனாட்சி(40) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.