செய்திகள்
கொரோனா பரிசோதனை

வல்லம் வட்டாரத்தில் ஒரே நாளில் 993 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-06-06 09:49 GMT   |   Update On 2021-06-06 09:49 GMT
வல்லம் வட்டாரத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒரே நாளில் 993 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வல்லம்:

வல்லம் சுகாதார வட்டாரத்தில் உள்ள வல்லத்தில் உள்ள அரசு மருத்துவமனை முகாமில் 40, ஆலக்குடியில் 100, நாகத்தியில் 202, மருங்குளத்தில் 463, தென்னங்குடியில் 92, காச வளநாடுபுதூர் பகுதியில் 33 பேர் என மொத்தம் 993 நபர்களுக்கு சுகாதார துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். வல்லம் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன்(பொறுப்பு), சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேலு ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News