செய்திகள்
வழக்கு பதிவு

வல்லத்தில் ஊரடங்கு மீறிய 19 பேர் மீது வழக்கு

Published On 2021-06-06 09:45 GMT   |   Update On 2021-06-06 09:45 GMT
வல்லத்தில் அத்தியாவசிய தேவையின்றி மோட்டார் சைக்கிள்களில் வெளியில் சுற்றி திரிந்த 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து 14 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பஸ் நிலையம் பகுதியில் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அத்தியாவசிய தேவையின்றி மோட்டார் சைக்கிள்களில் வெளியில் சுற்றி திரிந்த 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து 14 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் முககவசம் அணியாமல் வந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News