செய்திகள்
கோப்புபடம்

பாப்பாரப்பட்டி அருகே சூதாடிய 5 பேர் கைது

Published On 2021-06-05 16:20 GMT   |   Update On 2021-06-05 16:20 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பள்ளிப்பட்டி கிராமத்தில் மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக பாப்பாரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பாப்பாரப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பள்ளிப்பட்டி கிராமத்தில் மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக பாப்பாரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். 

அப்போது போலீசாரை பார்த்ததும் சூதாடியவர்கள் தப்பி ஓடினர். இதில் 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பள்ளிப்பட்டியை சேர்ந்த சேட்டு, வேலம்பட்டியை சேர்ந்த கீர்த்தி, கோவிந்தராஜ், அருண்குமார், தட்டாரப்பட்டியை சேர்ந்த விஜயன் ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.29,700-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News