செய்திகள்
உப்பிலியபுரம் அருகே மின்மாற்றியில் பயங்கர தீ விபத்து
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டியில் மாலை முதலே இடி மின்னலுடன் மழை தூறிக் கொண்டிருந்த நேரத்தில் மின்மாற்றி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டி மின்மாற்றியில் நேற்றிரவு 10 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாலை முதலே இடி மின்னலுடன் தூறிக் கொண்டிருந்த நேரத்தில் மின்மாற்றி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தீ விபத்தின் போது பயங்கர சத்தத்துடன் மின்மாற்றியில் ஒன்று வெடித்ததாக தெரிகிறது.
துறையூர், உப்பிலியபுரம் தீ மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டி மின்மாற்றியில் நேற்றிரவு 10 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாலை முதலே இடி மின்னலுடன் தூறிக் கொண்டிருந்த நேரத்தில் மின்மாற்றி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தீ விபத்தின் போது பயங்கர சத்தத்துடன் மின்மாற்றியில் ஒன்று வெடித்ததாக தெரிகிறது.
துறையூர், உப்பிலியபுரம் தீ மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.